அடுத்த வருடம் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பைக்கு இந்திய அணி தயாராகும் வகையில் பிசிசிஐயானது பக்காவான பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி:
சமீபத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த டி20 உலக கோப்பை தொடர் கோலாகலமாக முடிவடைந்தது. இந்த தொடரில், இங்கிலாந்து அணி 2வது முறையாக பட்டத்தை தட்டிச் சென்றது. இந்த தொடர் முடிந்த பிறகு, தற்போது அனைவரது கவனமும் அடுத்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பையின் பக்கம் திரும்பியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கு தயாராகும் வகையில், பிசிசிஐயானது இந்தியாவுக்கான பட்டியலை விரிவுப்படுத்தி உள்ளது. அதாவது, இந்திய அணி தற்போது தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை விளையாட நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, பங்களாதேஷிற்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.
IND VS NZ T20.., உம்ரன் மாலிக் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வாரா??
இதனை தொடர்ந்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், இந்திய அணி, இலங்கை (3), நியூசிலாந்து (3), ஆஸ்திரேலியா (3) மற்றும் வெஸ்ட் இண்டீஸ் (3) அணிகளுக்கு எதிராக மொத்தம் 12 ஒருநாள் போட்டிகளை ஆகஸ்ட் மாதம் வரை விளையாட உள்ளது. இதன் பின், செப்டம்பரில் தொடங்க உள்ள ஆசிய கோப்பை தொடரும் 50 ஓவர் வடிவில் நடைபெற இருப்பதால், அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் ஒரு நாள் உலக கோப்பை தொடருக்கு இந்தியா பலம் வாய்ந்த அணியாக திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை வெல்ல தவறிய இந்தியா, அடுத்த ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இப்போதே எழ தொடங்கி விட்டன.