தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து முக்கிய தகவலை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி வெளியிட்டுள்ளார்;
முக்கிய தகவல்:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடை வாயிலாக சாமானிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதையடுத்து பொங்கல், தீபாவளி, பண்டிகைகளுக்கு அரசால் வழங்கப்படும் ஊக்கத்தொகையும் ரேஷன் கார்டு வாயிலாக பொதுமக்களுக்கு சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தனை நாள் நயன்தாராவை இப்படி தான் நெனச்சுட்டு இருந்தீங்களா விக்கி.., கண்கலங்க வைத்த பதிவு!!
அந்த வகையில், வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதார்களுக்கு ரொக்க்கமாக 1000 ரூபாயுடன் மளிகை பொருட்களும் வழங்க அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை பார்வையிட்ட மத்திய அமைச்சர்கள், இந்தியாவிலேயே இங்க தான் சிறப்பான முறையில் பொதுமக்களுக்கு சேவைகள் வழங்ப்படுவதாக பாராட்டியுள்ளனர். மேலும் தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் அறிவிப்பு நாளை ( 19.11.2022) வெளியாகும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.