திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக 50ஆவது நாளை கடந்துள்ளது ‘மாஸ்டர்’ திரைப்படம். கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அதிகமான வசூலை அள்ளி குவித்துள்ளது ‘மாஸ்டர்’ திரைப்படம்.
‘மாஸ்டர்’ 50ஆவது நாள்
கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில், பலத்த எதிர்பார்ப்புகளோடு திரையரங்கில் பிரவேசித்தது ‘மாஸ்டர்’. கடந்த ஆண்டு முழுவதும் புதிய படங்கள் ஒன்றும் திரையரங்குகளில் திரையிடப்படாத நேரத்தில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ஜனவரி 13ம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. கொரோனா அச்சத்தால் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுடன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
திரைப்படம் வெளியான முதல் காட்சியிலிருந்தே தியேட்டர்களில் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. கொரோனா காரணமாக மக்கள் திரையரங்குகளுக்கு வர அச்சப்படுவார்கள் என்ற கணிப்பில், மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 16 நாட்களுக்குள்ளாகவே அமேசான் ஓடிடியில் வெளியானது. ஆச்சரியமளிக்கும் விதமாக இன்று வரை திரையரங்குகளில் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை காண மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் மட்டும் இதுவரை 250 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் – 11 லட்ச பேரின் வேலைக்கு திண்டாட்டம்!!
மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 50 நாள் ஆகிறது. இருந்தாலும் இன்றுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மாஸ்டர். ‘மாஸ்டர்’ வெளியாகி 50வது நாளை நடிகர் விஜய்யின் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் பின்னர் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நடிகர் தனுஷின் ‘கர்ணன்’, நடிகர் கார்த்தியின் ‘சுல்தான்’ மற்றும் நடிகர் சிவகார்த்திக்கேயனின் ‘டாக்டர்’ ஆகிய படங்கள் எவ்வளவு கூட்டத்தை சேர்க்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.