Saturday, May 4, 2024

‘பீட்டர் பாலை நீங்களே வச்சுக்கோங்க’ – வனிதா பல்டி, எலிசபெத் ஷாக்!!

Must Read

வனிதா விஜயகுமார் தற்போது அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படும் நபராக மாறி வருகிறார். தனது மன குமுறல்கள், வேதனைகள், உண்மை அனைத்தையும் வீடியோ மூலமாக பதிவிட்டு வருகின்றார். இப்படியான நிலையில் தற்போது அவர் பீட்டர் பாலை, அவரது முதல் மனைவி எலிசபெத் பார்த்து கொள்ளுங்கள் என்று அவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹாட் டாபிக் வனிதா:

இன்று சமூக வலைத்தளத்தை திறந்தாலே வனிதா விஜயகுமார் பெயர் தான் முதலில் வருகின்றது. காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன் தான் அவர் பீட்டர் பால் என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர் குடிபோதைக்கு அடிமையானவர் என்று தெரிந்து அவரை விட்டு பிரிந்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தான் எவ்வளவு விதமான கஷ்டங்களை பீட்டர் பாலை வைத்து அனுபவித்தேன் என்பதனை அவர் ஒரு வீடியோ மூலமாக அனைவருக்கும் தெரியப்படுத்தினார். தற்போது பீட்டர் பால் தனக்கு வேண்டாம் என்றும் அவரது முதல் மனைவி எலிசபெத் அவரை பார்த்து கொள்ளலாம் என்பது போல் கூறியுள்ளார். அவர் சில விஷயங்களை எலிசபெத்திற்கு கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது “நான் எதற்காக பீட்டர் பாலின் வாழ்க்கையில் வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எதோ ஒரு காரணத்திற்காக தான் வந்தேன் என்று தெரிகிறது. அது நல்ல எண்ணத்திற்காக தான் என்றும் தெரிகிறது. பீட்டர் பாலை வைத்து நீங்கள் எவ்வளவு வேதனை அனுபவித்திருப்பீர்கள் என்று எனக்கு முழுதாக புரியவில்லை என்று சொன்னாலும் இந்த சில மாதங்களில் நான் புரிந்து கொண்டேன். அவரை நான் மருத்துவமனையில் வைத்து காப்பாற்றினேன்.

 

“ஒருவர் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் அதனை காட்டும் சூழ்நிலை வேறாக இருக்க வேண்டும். அவர் கடுமையான நெஞ்சு வலியால் துடித்தபோது நான் உங்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன்”

பாதியிலேயே போகிறேன்:

“ஆனால், நீங்கள் அதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை. அதே போல் உங்களது மகனையும் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால், அதுவும் முடியாமல் போய் விட்டது. நான் உங்கள் கணவனை உங்களிடம் இருந்து பிரிக்கவில்லை. அதே போல் உங்கள கணவரை நீங்களே வைத்து கொள்ளுங்கள்”

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

அவர் மீது உங்களுக்கு உண்மையான காதல் இருந்தால் இந்த 6 மாதங்களில் நீங்கள் என்னை தொடர்பு கொண்டு இருக்கலாம். அவரிடம் பேசி இருக்கலாம்”

“உங்களுக்கும் எனக்கும் எந்த பகையும் இல்லை. நான் அவருக்காக நின்ற அளவு கூட நீங்கள் அவருக்காக நிற்கவில்லை. உங்களுக்கு அவருடன் வாழ வேண்டும் என்று தோன்றினால் நீங்கள் அவருடன் தாராளமாக வாழ்ந்து கொள்ளுங்கள். நான் உங்களை தடுக்க போவதில்லை. பாதியில் வந்தேன், பாதியிலேயே போகிறேன்” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

5 COMMENTS

  1. வனிதா உனக்கு வேணும் அவர் முஞ்ச பாத்த உடனே தெறிய வேணாமா குடிப்பாரா மாட்டாரானு இப்போ கண்னுக்கு எட்டுன வரைக்கும் சூரிய நம்பஸ்காரம் first wife சாபம் சும்மா உடுமா நீங்க ஏத்துக்காதிங்க எலிசபெத் என்னமோ டி டோட்டர் டயலாக்கள்ளாம் உட்ட இப்போ பாத்தியா அதுக்கு பெயர் என்ன ஞாபகம் வந்துட்டு சரக்கு glass டோட்டிலர் வரட்டா !!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -