பிக் பாஸ் மூலம் பிரபலமான வனிதா பற்றிய விஷயங்கள் தான் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகிக்கொண்டுள்ளது. மேலும் பீட்டர் பாலுக்கும் வனிதாவிற்கும் இடையே பிரேக்கப் ஆனதை அடுத்து அந்த கோவாவில் என்ன தான் நடந்தது என்று பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். இந்நிலையில் தற்போது வனிதா கோவா சென்ற விடியோவை வெளியிட்டுள்ளார்.
வனிதா பீட்டர் பால்
பிக் பாஸில் கலந்துக்கொண்ட வனிதா வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம். இதனால் வீட்டை விட்டும் வெளியேறினார். ஆனால் அடுத்ததாக பிக் பாஸ் அவருக்கு வைல்ட் கார்டு என்ட்ரி என மறுவாய்ப்பும் கொடுத்தது. அதிலும்பெயரையே கெடுத்து கொண்டார்.
அதன் பிறகு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா குக் வித் கோமாளியில் கலந்துக்கொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார். அதன் பின் தனியாக யூடூப் சேனல் ஆரம்பித்து அதற்கு உதவியாக இருந்த பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார்.
அதில் பல சர்ச்சைகளும் ஏற்பட்டது. இதனையெல்லாம் சமாளித்து வாழ்ந்துக்கொண்டிருந்த வனிதாவும் பீட்டர் பாலும் கோவாவிற்கு சுற்றுலா சென்றனர். அந்த புகைப்படமும் வைரலானது. ஆனால் அங்கிருந்து திரும்பியவர்களுக்கு பெரும் சண்டையே ஏற்பட்டது. இவர்கள் பிரிந்ததற்கான காரணத்தையும் வனிதா விடியோவாக வெளியிட்டார். ஆனால் கோவாவில் எதோ நடந்துள்ளதாக அனைவரும் கூறி வந்தனர்.
சூர்யா தேவி, டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா என பலரும் கோவாவில் நடந்த உண்மை எனக்கு தெரியும் என்று கூறி விடீயோக்களை வெளியிட்டனர். ஆனால் வனிதாவே கோவாவிற்கு சென்றதை விடியோவாக வெளியிட்டுள்ளார். அங்கு அவர்கள் பீச்சில் கொண்டாடிய அனைத்தையும் வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பீட்டர் பாலும் உள்ளார்.