இப்போ இருக்குற கால கட்டத்துல நாம உணவு மற்றும் மாசுபாட்டின் காரணமாகவும் நம்ம ஸ்கின் ரொம்பவே பாதிக்கப்படுது. புதுசு புதுசா கிரீம் பயன்படுத்தி நாமலே நம்ம அழக கெடுத்துக்குறோம். அதுக்கு பதிலா வீட்ல இருக்குற பொருளை வச்சு எப்படி முகத்தை அழகா வச்சுக்கிறதுன்னு பாக்கலாம்
முகம் பளிச்சென்று மாற:
ஐஸ் வாட்டர்ல பேஸ்வாஷ் பண்ணிட்டு தக்காளியை வச்சு நல்லா கால் மணிநேரம் மசாஜ் பண்ணுங்க அப்புறம் அந்த zதோலை வச்சே பச்சை பாலை தொட்டு தொட்டு பேஸ்ல வச்சு நல்லா தேக்கணும் இப்டியே ஒரு பத்து நிமிஷம் பண்ணிட்டு வெறும் வாட்டர்ல முகத்தை கழுவிடுங்க. அப்புறம் பாருங்க உங்க முகத்தை எப்படி இருக்குனு உண்மையாவே இது ரொம்ப நல்ல ரிசல்ட் கொடுக்கும். ட்ரை பண்ணி பாருங்க.
வெயிலினால் ஏற்படும் கருமை மாற:
ஒரு கேரட் எடுத்து தோலை சீவி விட்டு சின்ன சின்ன பீசா கட் பண்ணி மிக்சி ஜார்ல போட்டு கொஞ்சம் பச்சை பால் விட்டு அரைச்சு எடுத்துக்கோங்க ,அத முகத்தை நல்ல கழுவிட்டு ஒரு இருபது நிமிஷம் போட்டாலே போதுங்க உங்க முகம் வெயிலினால் வர கருமை வராம எப்பவும் பளிச்சுனு இருக்கும்.
கரும்புள்ளிகள் மறைய:
உருளைக்கிழங்கு ஜூஸ், ஆலிவ் ஆயில், பாதாம் ஆயில், கோக்கனட் ஆயில் சம அளவு எடுத்து பதினைந்து நிமிடம் முகத்தில் தடவ வேண்டும். கரும்புள்ளிகள் எல்லாம் மாறி முகம் பார்க்க அழகாக இருக்கும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
உதட்டின் கருமை மாற:
தேன் மற்றும் செக்கில் அரைத்த தேங்க்காய் எண்ணெய் சம அளவு எடுத்து முதலில் உதட்டில் தேய்க்க வேண்டும் பிறகு சீனியை வைத்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உதட்டின் நிறம் மாறி இருப்பதை நன்றாக உணரலாம் .
அம்மைத்தழும்பு மறைய:
கருவேப்பிலை ஒரு கை பிடி அளவு ,கசகசா ஒரு டீ ஸ்பூன் ,கஸ்தூரி மஞ்சள் அரை டீ ஸ்பூன், எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளவும். ஒரு மணிநேரம் முகத்தில தடவி கழுவ வேண்டும். ஒரு வாரத்தில் தழும்பு இருந்த இடமே தெரியாது.
முகம் பளிச்சென்றும் வெள்ளையாகவும் இருக்க:
பச்சை பயறு ,கசகசா,ஆவாரம் பூ,கடலை மாவு ,பச்சை அரிசி ஆகியவற்றை பச்சை பால் சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும். இந்த மாவை சோப்பிற்கு பதிலாக பயன்படுத்தலாம். அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
கருத்த உடல் சிவப்பாக மாற:
வெள்ளரிக்காய் ,வேப்பம் பூ , மஞ்சள் சேர்த்து அரைத்து குளிக்கும் போது உடல் முழுவதும் பயன்படுத்தலாம். ஒரு மாதத்தில் கருத்த உடல் சிவப்பாக மாறும்.
கை ,கால் மற்றும் கழுத்தில் உள்ள கருமை மாற:
காபி பவுடர்,எலுமிச்சை சாறு, தயிர் ,தேன் மற்றும் கடலை மாவு சேர்த்து பதினைந்து நிமிடம் போட வேண்டும் . பிறகு நிறம் மாறி இருப்பதை நன்றாக உணரலாம். வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.
முகம் தங்கம் போல் ஜொலிக்க:
பப்பாளி மற்றும் தேன் கலந்து தேய்க்க வேண்டும். முகம் பார்க்க மிகவும் அழகா தெரியும்.
புருவம் அடர்த்தியாக வளர:
சுத்தமாக செக்கில் அரைத்த விளக்கெண்ணெய் இரவில் தூங்க செல்லும் முன் இரண்டு புருவங்களிலும் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் புருவம் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருக்கும்.
பேபி ஸ்கின் மாதிரி வேணுமா:
ரோஸ் வாட்டர் மற்றும் பச்சை பால் சம அளவு எடுத்து முகத்தில் தடவ முகம் பட்டு போல் மாறும்.