வெள்ளித்திரை நடிகைகளுக்கு மக்களிடையே எவ்வளவு வரவேற்பு உள்ளதோ அந்த அளவிற்கு சின்னத்திரை நடிகைகளுக்கும் மவுசு அதிகம். அந்த வகையில் விஜே சித்ராவும் ஒருவர். இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இவருக்கு திருமணம் ஆக உள்ள நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் வருங்கால கணவருடன் கலந்து கொண்டார்.
விஜே சித்ரா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருப்பவர் விஜே சித்ரா. இவர் மக்கள் டிவியில் சட்டம் செல்வது என்ன?? என்ற நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். மேலும் பல சேனல்களில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதே போல பல சீரியல்களிலும் நடித்தும் வந்தார்.
சன் டிவி, விஜய் டிவி, கலர்ஸ் என பல சேனல்களில் வேலை பார்த்தவர் சித்ரா. இந்நிலையில் அவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். இந்த சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் சித்ரா. சித்ராகாகவே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்ப்பவர்கள் உண்டு.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலும் தனி ஆளாக இதனை நாள் சம்பாதித்த பணத்தில் பெற்றோர்களுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்துள்ளார். தற்போது லாக்டவுன் சமயத்தில் சித்ராவிற்கு நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் வருங்கால கணவருடன் பல புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் சித்ரா. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பான கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் சித்ராவின் வருங்கால கணவரும் கலந்துகொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதில் இருவருக்கும் எப்படி காதல் மலர்ந்தது என்றும் கூறியிருந்தார் சித்ரா. அதாவது ஹேமந்த் சித்ராவின் பக்கத்து வீடு தானாம். ஆனால் அவ்வளவாக பேசிக் கொண்டதில்லையாம். மேலும் லாக்டவுன் சமயத்தில் பலா, ஆரஞ்சு பழம் என சித்ராவின் வீட்டிற்கு கொடுத்துள்ளார். இதனால் சந்தேகித்த சித்ரா வீட்டில் வந்து பேச சொல்லி உள்ளார்.
பிறகு இரண்டு வீட்டிலும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு தான் இவர்களுக்கு நிச்சயம் நடந்ததாம். அந்த கிராமத்து கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இவர்களுக்கு நலங்கு வைக்கும் விழாவும் நடைபெற்றது. அதில் ஹேமந்த் மற்றும் சித்ராவிற்கு பல ரொமான்ஸ் சீன்கள் நடந்தது. அந்த புகைப்படங்களை தற்போது சித்ரா வெளியிட்டுள்ளார்.