துக்கம் தொண்டையை அடைத்து விட்டது – கதறும் வடிவேல்!!

0

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகரான விவேக் இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமாகினார். இந்நிலையில் விவேக்கின் மறைவிற்கு அவரது நெருங்கிய நண்பர் வடிவேல் மிக துக்கத்துடன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

வடிவேல் இரங்கல்

மாரடைப்பு காரணமாக நேற்று வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அவரது இறுதி சடங்கு இன்று மாலை 5 மணி அளவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவரது மறைவிற்கு சினிமா உலகினர், அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் சூர்யா, ஜோதிகா, த்ரிஷா, விக்ரம், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நேரடியாக சென்று விவேக்கின் உடலுக்கு தங்களது அஞ்சலியை செலுத்தினர். இந்நிலையில் தற்போது விவேக்கின் நெருங்கிய நண்பரும் பிரபல நகைச்சுவை நடிகருமான வடிவேல் தற்போது தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, விவேக்கின் மரணம் என்னால் நம்ப முடியவில்லை.

சமூகம் குறித்த கருத்தை சினிமா மூலம் வெளிப்படுத்தியவர் விவேக் – பிரதமர் மோடி இரங்கல்!!

துக்கம் தொண்டையை அடைக்கிறது. எனது நெருக்கமான நண்பரை இழந்துவிட்டேன். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளை மக்கள் மனதில் என்றும் இருக்கும். விவேக் நடிப்பு மட்டுமல்லாமல் மக்களின் நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டவர் என்று கண்ணீர் மல்க நடிகர் வடிவேல் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here