வீட்டிற்கு தெரியாமல் போஸ்டர் ஒட்டும் வேலை பார்க்கும் கதிர் – விறுவிறுப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”!!

0

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிர் பகுதி நேர வேலை பார்க்கிறார். மீனா மற்றும் கண்ணன் இருவரும் கதிர் படிப்பது குறித்து சந்தேகம் அடைந்து அது குறித்து முல்லை மற்றும் கதிரிடம் கேட்கின்றனர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கதிர் பகுதி நேரமாக போஸ்டர் ஒட்டும் வேலைக்கு செல்கிறார். இது குறித்து அவர் வீட்டில் உள்ள யாரிடமும் எதுவும் கூறவில்லை. அதே போல் இரவு நேரத்தில் முல்லை கதிருக்கு சொல்லி கொடுக்க வேண்டிய பாடங்களை குறித்து யோசித்து செய்கிறார். இதனை பார்க்கும் கதிர் அவரை திட்டி விட்டு தூங்க சொல்கிறார்.

சமூகம் குறித்த கருத்தை சினிமா மூலம் வெளிப்படுத்தியவர் விவேக் – பிரதமர் மோடி இரங்கல்!!

பின், காலையில் இருவரும் ஒரு கணக்கு குறித்து விவாதிக்கின்றனர். இதனை தூரத்தில் இருந்து கவனிக்கும் மீனா கண்ணனை அழைத்து கொண்டு இருவரும் அப்படி எந்த கணக்கு குறித்து பேசுகிக்கிறீர்கள் என்று கேட்கிறார்.

இதற்கு இருவரும் நன்றாக சமாளித்து விடுகின்றனர். மீனாவும் வித விதமாக கேட்டு பார்க்கிறார். ஆனால், இருவரும் அது குறித்து சொல்லவே இல்லை. பின், மீனா மற்றும் ஜீவா இருவரும் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தி விட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அப்போது சில பெண்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குறித்தும் புதிய அறிமுகமான “டோர் டெலிவரி” குறித்தும் பேசுகின்றனர். இதனால் மீனா மற்றும் ஜீவா இருவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். பின், தொடர்ச்சியாக ஆர்டர் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் கதிர், மூர்த்தி மற்றும் ஜீவா அனைவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here