உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை விரட்டுவதற்காக அப்பகுதி மக்கள் இருவரை கரடி வேடமணிந்து குரங்குகளை விரட்ட புது யுக்தியை கையாண்டு உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள சிக்கந்தர்பூர் கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட குரங்குகள் தினமும் மக்களுக்கு தொல்லை குடுத்து அட்டகாசம் செய்து வந்துள்ளன. வனத்துறை அதிகாரிகள் முயற்சி செய்தும் இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
மேலும் ஒரு குரங்கை பிடிக்க ரூ. 600 வரை செலவு ஏற்படுகிறது. தற்போது அரசாங்கத்திடமும் போதிய நிதி இல்லாத காரணத்தால் மக்களே குரங்குகளை விரட்ட முடிவு செய்து இந்த யுக்தியை கையாண்டு உள்ளனர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.1,700 மதிப்புள்ள மூன்று கரடி உடையை வாங்கி மனிதர்களுக்கு அணிவித்து குரங்குகளை விரட்ட முயற்சித்து உள்ளனர். குரங்குகளும் நிஜ கரடிகள் என நினைத்து பயந்து ஓடுகின்றன.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இந்த யுக்தியினால் தற்போது அங்கு குரங்குகளின் தொல்லை குறைந்து உள்ளது. எனவே, இந்த யுக்தியை மற்ற கிராமங்களிலும் பயன்படுத்த ஊர்மக்கள் முடிவு செய்து உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |
LOSSE