“அன்புள்ள திருடனுக்கு” பள்ளியில் திருடிச் சென்றவருக்கு ஆசிரியர்களின் உருக்கமான கடிதம்..!

0

கேரளா மாநிலத்தில் பள்ளியில் லேப்டாப் மற்றும் பலவற்றை திருடிச் சென்ற திருடனுக்கு அந்த பள்ளி ஆசிரியர்கள் எழுதிய கடிதம் தற்போது வைரல் ஆகி உள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் உள்ள தனியார் பள்ளி 44 ஆசிரியர்கள் மற்றும் 640 மாணவர்களுடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த பள்ளியில் ஜனவரி 29 அன்று நுழைந்த திருடன் மூன்று லேப்டாப், ஒரு ‘பென் டிரைவ்’ மற்றும் சி.சி.டி.வி., காட்சிகள் பதிவாகும், ‘ஹார்டு டிஸ்க்’ போன்றவற்றை திருடிச் சென்று விட்டான். இது குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

திருடப்பட்ட பென் டிரைவில் ஆசிரியர்களின் வருகை பதிவேடு உள்ளதால் அதில்லாமல் அவர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்பதால் அப்பள்ளி ஆசிரியர்கள் அந்த திருடனுக்கு ஒரு கடிதம் எழுதி பேஸ்புக், வாட்ஸ்அப்பில் ஷேர் செய்து உள்ளனர்.

உருக்கமான கடிதம்..!

அந்த கடிதத்தில் “அன்புள்ள திருடனுக்கு… நீ யார் என்று எங்களுக்கு தெரியாது. ஆசிரியர்களின் ‘டிஜிட்டல் கையெழுத்து’ அடங்கிய பென் டிரைவை நீ எடுத்து போய்விட்டாய். அந்த பென் டிரைவில் உள்ள வருகைப் பதிவின் படிதான் எங்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள். அது இல்லாததால் எங்களுக்கு இந்த மாத சம்பளம் கிடைக்காது.

வீட்டு செலவு, பெரியவர்களுக்கு மருத்துவ செலவு, கடனுக்கு வட்டி கட்டுதல் போன்றவைகள் உள்ளன. எனவே அந்த ‘பென் டிரைவ்’வை மட்டும் திருப்பி கொடுத்து விடு” என உருக்கமாக அந்த திருடனுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here