கோலிவுட் திரையில் ”ஒரு கல் ஒரு கண்ணாடி” என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் உதயநிதி ஸ்டாலின். இதை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் கமிட்டாகி நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது இவர் அரசியலில் குதித்து கட்சி பணிகளில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இதனிடையில் இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதில் இவருடன் மலையாள திரை நடிகர் பகத், வைகைப்புயல், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படம் இந்த மாதம் 29 தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் திரை வெளியீட்டுக்கு இடைக்கால தடை விதிக்க கூறி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். அதாவது இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஞ்சல் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இதை தொடர்ந்து 80 % படப்பிடிப்பு முடிந்த நிலையில் மீதி 20 % ஷூட்டிங்கை முடிக்க உதயநிதி கால்ஷீட் கொடுக்க மறுக்கிறாராம். இதுபோக மாமன்னன் படம் தான் நடிக்கும் கடைசி படம் என பல இடங்களில் சொல்லி வருகிறார். இதனால் பீதியடைந்த தயாரிப்பாளர் ஏஞ்சல் படத்திற்கு தான் இதுவரை 13 கோடி செலவிட்டுள்ளேன், அதனால் உதயநிதி தனக்கு கால்ஷீட் தரும் படி உத்தரவிட வேண்டும். அப்படி இல்லை என்றால் 25 கோடி அபராதம் பெற்று தரும்படி நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார்.