பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் மூர்த்தி முல்லைக்காக வைத்த வேண்டுதலை நிறைவேற்றுகிறார். அப்போது முல்லையின் அப்பா வருத்தப்பட அவருக்கு தனம், மூர்த்தி இருவரும் ஆறுதல் கூறுகின்றனர். இந்த பக்கம் ஜீவா போனில் பேசிக்கொண்டு வரும்போது ஜனார்த்தனன் என்ன விஷயம் என்று கேட்க, முல்லைக்கு நல்லபடியா குழந்தை பிறந்தால் 100 பேருக்கு அன்னதானம் போடுறதா வேண்டிருந்தேன் என்று சொல்ல ஜனார்த்தனன் ஆத்திர படுகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் ஜனார்த்தனன் எவன் அப்பன் வீட்டு காச எடுத்து யாருக்கு செலவு பண்றது என கோபப்பட மீனா சண்டை போடுகிறார். இந்த பக்கம் முல்லைக்கு கதிர் சாப்பாடு ஊட்டி விடுகிறார். அடுத்ததாக ஜீவாவும், மீனாவும் அன்னதானம் கொடுக்கின்றனர். அப்போது மீனா எனக்கு கால் வலிக்குது என்று சொல்ல ஜீவா கிண்டல் செய்கிறார். அந்த நேரத்தில் மீனா ஜீவாவிடம் நீ எவ்வளவு வேலை பாக்குற. அதுக்கு நீ சம்பளத்தை எடுத்துக்கோ என்று சொல்ல ஜீவா என்னால எப்படி பணத்தை எடுக்க முடியும் என்று கேட்கிறார்.
பின் ஜீவாவிற்கு மீனா அட்வைஸ் செய்கிறார். இந்த பக்கம் முல்லை கதிரிடம் எனக்கு குழந்தையை பார்க்கணும் போல இருக்கு என்று சொல்ல அவரை அழைத்து செல்கிறார். அடுத்ததாக கதிர் இரவு முழுவதும் தூங்காமல் இருக்க அவரை முல்லை தூங்க சொல்கிறார். மறுநாள் மூர்த்தி, தனம் குழந்தையை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பின் கதிர் முல்லைக்கு தலை சீவி விட இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.