கடந்த வாரம் தங்க விலை ஏற்றத்திலேயே இருந்ததால் மக்கள் கவலை அடைந்து வந்தனர், ஆனால் சென்னையில் தங்கத்தின் விலை வாரத்தின் முதல் நாளான இன்று குறைந்துள்ளது அனைவரையும் சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது.
கொரோனா பரவல்:
கொரோனா நோய் பரவல் காரணமாக அனைத்து தொழில் நிறுவனங்கள், பங்குச்சந்தை என்று அனைத்தும் முடங்கியது. இதனால், முதலீட்டாளர்கள் அனைவரும் தங்கம் மற்றும் வெள்ளி தான் பாதுகாப்பான முதலீடு என்று கருதி அதில் முதலீடு செய்து வந்தனர். இதனால் தங்க விலை சரமாரியாக உயர்ந்து வந்தது. கடந்த சில நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மக்கள் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம் என்று கருதினர். ஆனால், கடந்த வாரம் தங்க விலை தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்தது. இது மக்களை சோகம் அடைய வைத்தது. ஆனாலும், தங்க நகைகளின் விற்பனை ஜோராக தான் நடந்து வந்தது. அனைத்து தரப்பு மக்களும் கவலை அடைந்து வந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்க விலை குறைந்துள்ளது.
இன்றைய நிலவரம்:
இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 38,160 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமிற்கு 10 ரூபாய் குறைந்து 4,770 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு உயர்ந்து ரூ.62.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.