தமிழகத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை வாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்கள் ஜவுளி, மளிகை கடை, அரிசி கடை, ஸ்வீட் ஸ்டால் போன்ற சுயதொழில் செய்ய, 25 சதவீத மானியத்துடன் கடன் உதவிகளை வழங்க உள்ளது. அதன்படி ரூ.15 லட்சம் வரையில் கடன் உதவியும், அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியமாகவும் தமிழ்நாடு அரசு வழங்குகிறது.
TNPSC குரூப் 4: 2016 ன் விடையுடன் கூடிய பொது அறிவு வினாத்தாள்…, மிஸ் பண்ணிடாதீங்க தேர்வர்களே!!
இந்த திட்ட பலன்களை பெற ஆர்வமுள்ளவர்கள் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் உள்ள UYEGP விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து அந்தந்த மாவட்ட தொழில்நெறி மையத்தில் ஒப்படைக்க சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் அறிவுறுத்தி உள்ளார்.