தமிழகத்தில் ஏதேனும் முக்கிய பண்டிகைகளில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்பட கூடாது என்பதற்காக டாஸ்மாக் கடைகளுக்கு விடுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, நாளை (அக்டோபர் 27 )சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற இருக்கும் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டும், வருகிற அக்டோபர் 29 மற்றும் 30 பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டும், அந்த நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்துள்ளார்.