தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மத்திய அரசு வெளியிட்டு உள்ள வழிகாட்டுதலின் படி பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தில் அது குறித்து எந்த முடிவும் இதுவரை எட்டப்படவில்லை.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள், பல மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் திறக்கப்படவில்லை. அக்.1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக வெளியிடப்பட்ட அரசாணையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் நிறுத்தி வைக்கப்பட்டது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
பள்ளிகள் திறப்பு குறித்த கேள்விக்கு, ‘மாணவர்களின் உயிர் தான் அரசுக்கு முக்கியம்’ என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார். அக்.15 முதல் பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதனை பின்பற்றி புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநில அரசுகள் பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்கி உள்ளன.
தலைமைச் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு!!
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில் கல்விக்கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் நவம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.