நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய உத்திரப் பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான தலித் சிறுமி நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது. அதே பகுதியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாலியல் பலாத்காரம்:
இந்தியாவில் சமீப காலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதில் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது. தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவிலேயே அதிக பாலியல் குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் உத்திரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நான்கு வயது சிறுமி தனது உறவினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சஸ்னி கிராமத்தின் பூத்புரா பகுதியின் சுற்றுப்புறத்தில் நடந்தது. தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தத 4 வயது சிறுமியை, குற்றவாளி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தலைமைச் செயலாளர் பதவிக்காலம் நீட்டிப்பு – தமிழக அரசு உத்தரவு!!
மாலையில் சிறுமியை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உ.பி., ஹத்ராஸில் 19 வயது தலித் பெண்னை 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் நடைபெற்று 1 மாதத்தில் மற்றொரு கொடூரம் அரங்கேறி உள்ளது.