ஹெலிகாப்டரில் இருந்து பண மழையா..? வதந்தி பரப்புவோரை எச்சரித்த மத்திய அரசு..!

0

ஹெலிகாப்டர் மூலம் நாட்டின் ஒவ்வொரு நகரத்திலும் பணத்தை வீசி மக்களுக்கு கொடுக்க
திட்டமிட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனாவால் தொழில்துறையில் முடக்கம்..!

இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனா பரவுதலை தடுக்க மே 3-ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக தொழில்துறைகள், நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. அன்றாட கூலி வேலை செய்பவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது. தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவி திட்டங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடுமையான நடவடிக்கை..!

மத்திய அரசு ஒவ்வொரு நகரத்திலும் ஹெலிகாப்டர் மூலம் மக்கள் மீது பண மழை பொழியப்போவதாக சமூக வளைதலங்களில் தகவல் வெளியானது. இதனையறிந்த மத்திய அரசு கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய தகவல் மற்றும் செய்தி ஒளிபரப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில் பண மழை பொழியப்போவதாக செய்தி பொய்யானது என்றும் இதுபோன்று தவறான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here