கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரர், பெடரர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார், அவர் தற்போது தனது ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான தனது கொரோனா தனிமையை பற்றி கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு:
கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா நோய் பரவல் அனைவருக்கும் அதிகமாக இருந்துவந்தது. அதிலும் குறிப்பாக சில விளையாட்டு வீரர்களுக்கு அதிகமாக பரவி வந்தது கொரோனா.
ஆடவர் டென்னிஸ் போட்டியில் 20 கிராண்ட்ஸ்லாம்களுடன் முதலிடத்தில் இருப்பவர் தான்,பெடரர். அவர் தனது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக 2020 ஆம் ஆண்டு நடக்க இருந்த எல்லா போட்டிகளில் இருண்டதும் விலகுவதாக அறிவித்தார்.
திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸிற்கு கொரோனா தொற்று உறுதி!!
ஆனால், அனைவரும் அதிர்ச்சி அடையும் வண்ணமாக, டென்னிஸ் வீரர் பெடரர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மருத்துவர்களின் ஆலோசனையின் பெயரில் அவர்கள் இருவரும் தங்களை தனிமை படுத்தி கொண்டனர்.
பெடரர்யின் பதிவு :
இதனால் தன்னை தனிமை படுத்தி கொண்ட டென்னிஸ் வீரர், பெடரர் தந்து ரசிகர்களுக்கு என்று ஒரு பதிவு இட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது “நான் கடந்த 25 ஆண்டுகளில் இவ்வளவு நாட்கள் வீட்டில் இருந்ததில்லை.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
எனக்கு இது ஒரு புது அனுபவமாக உள்ளது. நாங்கள் ஒரு மலை பிரதேசத்தில் தான் உள்ளோம். அதனால், பாதுகாப்பாக உள்ளோம்.
கொரோனா தடுப்பு மற்றும் விதிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகிறேன். என் பெற்றோர்களை பார்த்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. யாரையும் பார்க்க முடிவதில்லை. இந்த கடினமான காலம் தான் எனக்கு வாழ்க்கையில் குடும்பம், நண்பர்கள், மகிழ்ச்சி மற்றும் உடல்நலம் தான் முக்கியம் என்பதை நன்றாக உணர்த்தி உள்ளது.