தெலுங்கானா மாநிலத்தில் முறையற்ற காதலால் செய்யப்பட்ட 1 கொலையை மறைப்பதற்காக 9 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவை மிஞ்சிய இந்த குற்ற சம்பவம் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
9 கொலைகள்:
தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 150 கிமீ தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேரின் உடல்கள் ஒரே கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது. அவர்களின் உடலில் காயங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் முதலில் தற்கொலையாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக 24 வயது இளைஞர் ஒருவரை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சினிமாவை மிஞ்சிய குற்ற சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது.
முறையற்ற காதல்:
மசூத் – நிஷா என்கிற தம்பதி வாரங்கல் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு பீஹாரைச் சேர்ந்த சஞ்சய் என்கிற 24 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நிஷாவின் அக்கா மகள் ரபீகா என்பவர் தனது 16 வயது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் பிழைப்புக்காக வாரங்கல் பகுதிக்கு வந்துள்ளனர். சஞ்சய்க்கு உணவு சமைத்து கொடுக்கும் பணியை செய்யத் தொடங்கிய ரபீகா அவர் மீது காதலில் விழுந்துள்ளார். இதனால் தனது மகள் மற்றும் மகள்களுடன் சஞ்சய்யை திருமணம் செய்து வாழ முடிவு செய்துள்ளார்.
ஆனால் சஞ்சய் ரபீகாவின் 16 வயது மகளின் மீது ஆசை வைத்துள்ளார். இதனை எதிர்பாராத ரபீகா சஞ்சய்யை கடுமையாக திட்டி உள்ளார். இதற்கடுத்து ரபீகாவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மார்ச் 7ம் தேதி ரயிலில் அழைத்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளான். ஆனால் இரவு நேர பயணத்தின் பொழுது வழியிலேயே ரபீகாவிற்கு மோரில் தூக்கு மாத்திரை கலந்து கொடுத்து மயக்கமடைந்ததும், துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு வீடு திரும்பி உள்ளான்.
சஞ்சய் மட்டும் தனியாக வருவதைக் கண்ட நிஷா, ரபீகாவை பற்றி கேட்டுள்ளார். அவரை சொந்த ஊரில் இருக்க வைத்து விட்டு வந்துள்ளதாக கூறியுள்ளான் சஞ்சய். ஆனால் இதனை நம்பாத நிஷா உண்மையை கூறவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகார் செய்து விடுவேன் என கூறியுள்ளார். இந்நிலையில் நிஷாவின் மகனுக்கு நடைபெற்ற பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் பொழுது அனைவர்க்கும் குளிர் பானத்தில் மயக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளான் சஞ்சய்.
இரவு 12.30 மணிக்கு அனைவரும் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த பொழுது திட்டமிட்டபடி, தனித்தனியாக ஒவ்வொருவரையும் சாக்குப்பையில் கட்டி கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளான். இதில் நிஷாவின் குடும்பத்தினர் 6 பேர், பீஹாரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் என 9 பேர் உயிரிழந்து உள்ளனர். சிசிடிவி காட்சிகள் மூலம் உண்மையை கண்டறிந்த போலீசார் ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த சஞ்சய்யை கைது செய்தனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |