இந்தியாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீட்டிப்பு..? மத்திய அரசு ஆலோசனை..!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் வரும் 31ம் தேதியுடன் முடியவுள்ள ஊரடங்கு உத்தரவு மேலும் 2 வாரங்கள் (ஜூன் 14) நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இந்தியாவில் 1.45 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 4167 பேர் உயிரிழந்து உள்ளனர். உலகளவில் கொரோனா பாதித்த டாப் 10 நாடுகளுக்குள் இந்தியாவும் நுழைந்து உள்ளதால் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தீவிரமடைந்து கொண்டு வருவதால் ஊரடங்கை நீட்டிக்கவே அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த காரணங்களால் இந்தியாவில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தீவிர ஆலோசனையில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here