தமிழகத்தின் 7 மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருத்தணி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை அனல் காற்றுடன் வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் காலை 11.30 மணிமுதல் மதியம் 3.30 வரை வெயிலில் வேலை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |