ஆகஸ்ட் மாதம் பள்ளிகள் திறப்பு – தமிழக அரசு முடிவு..!

0

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க இன்று நடைபெற்ற கூட்டத்தில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் மார்ச் 24ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக 60 நாட்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது, அவ்வாறு திறந்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்தி முடிப்பது குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் ஆகஸ்ட் மாதம் 2வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் மற்றும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் வகுப்புகளை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் பள்ளிகளை திறந்தால் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் காலை, மாலை என இரு பிரிவுகளாக பிரித்து வகுப்புகளை நடத்துவது மற்றும் 6 முதல் 12ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பாடங்களை நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here