வருமான வரி கணக்கை செலுத்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தணிக்கை தேவை என்று சொன்னவர்களுக்கு இந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய மதிப்பீடு செய்பவர்களுக்கான காலாவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி:
வருமான வரி என்பது ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தாங்கள் ஈட்டும் வருமானத்திற்கேற்ப ஒரு குறிப்பிட்ட தொகையினை தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு வழங்குவது ஆகும். இந்த வரியினை வைத்தே மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு சேவைகளை வழங்கும். வருமானவரி சட்டம் 1961 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
வரியினை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் வழங்க வேண்டும் என்பது சட்டம் ஆகும். வருமான வரியினை சரிபார்த்தல், வருமானவரி குறித்த மனுக்களை தாக்கல் செய்தல் போன்றவற்றை வருமான வரித்துறை செய்கிறது. இந்த ஆண்டு வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்ய வருமான வரித்துறை ஜூலை மாதம் 31 ஆம் தேதியினை கடைசி தேதியாக அறிவித்திருந்தது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
கொரோனா பரவல் அச்சம் காரணமாகவும், பொது முடக்கத்தால் தொழில் முனைவோர்களில் நிலையினை கருத்தில் கொண்டும் வருமான வரியினை தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
பின், பல்வேறு காரணங்களால் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 31 என்று கூறப்பட்டது. தற்போது வரி தணிக்கை தாக்கல், வரி கணக்கு தாக்கல், சர்வதேச அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனை தொடர்பான அறிக்கை போன்றவற்றை தாக்கல் செய்ய வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூபாய் ஒரு லட்சம் வரை சுய மதிப்பீடு செய்யும் சிறு மற்றும் நடுத்தர வர்க்க வரி செலுத்துவோருக்கு செய்ய வேண்டும் என்பவர்களுக்கான கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
In view of constraints being faced by taxpayers due to COVID-19,CBDT further extends due dates for various compliances for FY 2019-20:
The due dt of furnishing Income Tax Returns(ITRs)for taxpayers whose accounts require to be audited has been extended to 31st, January,2021 (1/5) pic.twitter.com/cWWbXu80K9— Income Tax India (@IncomeTaxIndia) October 24, 2020