தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் மதுபானம் விற்பனை – அரசு அறிவிப்பு..!

0

தமிழகத்தில் மே 31 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தினமும் கூடுதலாக 2 மணிநேரம் மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது.

டாஸ்மாக் திறப்பு:

தமிழகத்தில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு பல்வேறு எதிர்ப்புகளுக்கும் இடையில் மது விற்பனை ஜோராக நடைபெற்றது. ஒரே நாளில் 170 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெற்றது. பின்பு மே 8ம் தேதி உரிய விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததால் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு ஒரு கடையில், ஒரு நாளைக்கு 500 பேருக்கு மது விற்பனை செய்யப்படுகிறது. பல வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. இந்நிலையில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்கப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகளில் இனிமேல் கூடுதலாக 2 மணிநேரம் அதாவது இரவு 7 மணிவரை மது விற்பனை நடைபெறும் என அரசு அறிவித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here