வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த ‘அம்பன்’ அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
அம்பன் புயல்:
தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 16ம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதியாக இருந்த பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியது. தெற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயலுக்கு ‘அம்பன்’ என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. தற்போது இது அதிஉச்ச தீவிர புயலாக மாறி உள்ளது. சென்னைக்கு கிழக்கே கிட்டத்தட்ட 650 கிமீ தொலைவில் மையம் கொண்டு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
மணிக்கு 180 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அம்பன் புயல் வடகிழக்கு திசையை நோக்கி நகரும் எனவும், இதனால் கடல் சீற்றத்துடனும், இடையில் அதி சீற்றத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |