பாஸ்டேக் இல்லை என்றால் இரு மடங்கு கட்டணம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு..!

0

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கக்கட்டணம் வசூலிப்பு மையங்களில் பாஸ்டேக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பாஸ்டேக் இல்லாமல் வரும் வாகனங்களிடம் இரு மடங்கு கட்டணம் வசூலிக்குமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மீண்டும் சுங்கக்கட்டணம்:

இந்தியாவில் 2019ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் மின்னணு முறையில் வசூலிக்கும் திட்டமான ‘பாஸ்டேக்’ நடைமுறைக்கு வந்தது. மேலும் பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் செல்வதற்கு என தனி வழியும் ஏற்படுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு காரணத்தால் சுங்கக்கட்டணம் வசூல் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 20ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் 96 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – 3 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை..!

இந்நிலையில் பாஸ்டேக் வசதி உள்ள வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழிகளில் மற்ற வாகனங்களும் செல்கின்றன. இதனால் பாஸ்டேக் வசதி இருந்தும் வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் இன்று முதல் பாஸ்டேக் இல்லாமல் அதன் வழிகளில் வரும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு சுங்கக்கட்டணம் வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here