ஒற்றுமையாக இருந்த குடும்பம் அர்ஜுனின் சூழ்ச்சியால் பிரிந்த நிலையில் தமிழ் சொந்தமாக தொழில் தொடங்கி அசத்தி வருகிறார். ஆனால் எப்படியாவது தமிழின் வளர்ச்சியை தடுத்து அவரது குடும்பத்தார் மனதில் அவர் மீது தவறான எண்ணத்தை கொண்டு வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் அர்ஜுன். இதனால் அடுத்தடுத்து இதில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்படி இருக்கையில் இந்த சீரியலின் நியூ ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வசுந்தரா சரஸ்வதியுடன் போனில் பேசி கொண்டே மாடி படிக்கட்டில் ஏறும்போது படி வழுக்கி விழுகிறார். தன்னுடன் பேசிக்கொண்டிருந்த வசு திடீரென அமைதியாக இருக்கிறாரே என சந்தேகப்பட்ட சரஸ்வதி, கோதையின் வீட்டுக்கு வந்து பார்த்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்.
இதையறிந்த குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்த நிலையில்,வசுவுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. அப்போது ரத்தம் கொடுத்து சரஸ்வதி, தாயையும் பிள்ளையையும் காப்பாற்றுகிறார். இதை பார்த்த வசுவின் அம்மா பிறந்த குழந்தையை சரஸ்வதி கையில் கொடுத்து ”சாமி மாதிரி வந்து என் பிள்ளையையும் குழந்தையும்” காப்பாத்திட்டீங்க என உணர்வுபூர்வமான வார்த்தைகளால் நன்றி கூறுகிறார். அப்போது அங்கிருந்த கார்த்திக் கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்ல, கோதை தன் கண்ணில் கண்ணீருடன் அவரை பார்க்கிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்க்கும் போது வசுவின் அம்மா எப்படியும், அர்ஜுன் பற்றி சில விஷயங்களை அமபலப்படுத்துவார். இதனால் கண்டிப்பாக அர்ஜுனின் உண்மை முகம் தெரிய ஆரம்பிக்கும்.