பிரசவ வழியில் உயிருக்கு போராடும் ஐஸ்வர்யா.., அல்லாடிப்போன குடும்பம்.., பாண்டியன் ஸ்டோர்ஸ் அதிரடி ட்விஸ்ட்!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்பொழுது முல்லையின் வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. ஜீவாவும் கண்ணனும் குடும்பத்துடன் கலந்தும் கொண்டனர். இதன் மூலம் மறுபடியும் குடும்பம் ஒன்று சேருமா?? வாய்ப்பிருக்கிறதா?? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். ஜனார்த்தனன் வேறு தனத்திடம் சவால் விட்டிருந்தார்.

தனம் அதில் ஜெயிப்பாரா?? இல்லை ஜீவா மாமனாரின் சதி வலையில் சிக்கி கொள்வாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் கண்ணன் ஐஸ்வர்யா விவரம் தெரியாமல் தனியாக வந்து விட்டனர். ஐஸ்வர்யா தனக்கு யார் வளைகாப்பு நடத்துவார், தன்னை யார் பார்த்துக்கொள்வார் என்று சொல்லி அழுகிறார். கண்ணன் எல்லாம் எங்க வீட்டுல பார்த்துக்குவாங்க என்று சொல்கிறார். ஆனாலும் ஐஸ்வர்யா கேட்பது போல இல்லை.

இந்நிலையில் தான் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, திடீரென ஐஸ்வர்யாவிற்கு பிரசவ வலி வந்து விடுமாம். என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணா துடிக்க ஆரம்பிப்பாராம். அதன் பிறகு வீட்டிற்கு கால் செய்ததும் கதிர் தனம், மூர்த்தி அனைவரும் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வார்களாம். அவங்களை அவமானப்படுத்தியும் இவ்வளவு தூரம் நம்மளை பார்த்துக்குறாங்களே என்று ஐஸ்வர்யா கூனி குறுகி போவாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here