லண்டனில் கிராபிக்ஸ்.. ஆத்தாடி.., உயிரை பணயம் வைத்த வீரர்கள்.., வாடிவாசல் குறித்து ஓப்பனாக பேசிய தாணு!

0
லண்டனில் கிராபிக்ஸ்.. ஆத்தாடி.., உயிரை பணயம் வைத்த வீரர்கள்.., வாடிவாசல் குறித்து ஓப்பனாக பேசிய தாணு!
லண்டனில் கிராபிக்ஸ்.. ஆத்தாடி.., உயிரை பணயம் வைத்த வீரர்கள்.., வாடிவாசல் குறித்து ஓப்பனாக பேசிய தாணு!

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் வாடிவாசல் படத்தை குறித்து தயாரிப்பாளர் தாணு பேசியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

வாடிவாசல் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் இயக்குநர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு பெற்றது. இதனை தொடர்ந்து விடுதலை 2 மற்றும் வாடிவாசல் படத்தை எடுப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் முதன் முதலாக நடிகர் சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் தான் வாடிவாசல். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆரம்பத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. அதன் பின்னர் சில காரணங்களால், படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர் தாணு படத்தை குறித்து பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தனுஷின் கேப்டன் மில்லர் ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை ., அனுமதி பெற்று மீண்டும் தொடங்கும் படப்பிடிப்பு!!

அதாவது அவர் பேசியதாவது, தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. மேலும் காளைகள் பயிற்சிக்காக மட்டும் ஒன்றரை கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் இருக்கும் காளைகளை வரவழைத்து 5 நாட்கள் தயார் செய்து சோதனை படப்பிடிப்பு நடத்தினோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here