நாளை மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
நாளை மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
நாளை மாநிலம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவராக இருந்து , 5 முறை முதலமைச்சராக பணியாற்றியவர் தான் பிரகாஷ் சிங் பாதல். இவருக்கு கடந்த வாரம் முதல் மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்துள்ளது. இதை தொடர்ந்து அவரை மொகாலியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவரை பரிசோதனை செய்த போது, இரைப்பை அழற்சி மற்றும் ஆஸ்துமா காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாக மருத்துவர்களுக்கு தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் அவரை மருத்துவர்கள் கவனித்து வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இவரின் இறப்புக்கு நரேந்திர மோடி முதல் பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரின் மறைவை ஒட்டி, தேசிய அளவில் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாணவர்கள் கட்டாயம் 75% வருகை பதிவு இருந்தால் மட்டுமே தேர்ச்சி…, பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

இந்த நிலையில் பஞ்சாப் அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது பஞ்சாப் அரசாங்கம் நாளை வியாழன் அன்று தங்களது துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாக அறிவித்துள்ளது, அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மறைந்த தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மூடப்பட்டிருக்கும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி நாளை பிரகாஷ்சிங் பாதலின் இறுதி சடங்கு நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here