Saturday, April 27, 2024

14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை மையம் எச்சரிக்கை!!

Must Read

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இதனால் இன்று தமிழகத்தின் பெரும்பலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிதான காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறி நாளை குமரி மற்றும் கேரள பகுதிகளை கடக்க உள்ளது. இதனால் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாளை தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும். மதுரை, தேனி, புதுக்கோட்டை, விருதுநகர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். டிசம்பர் 3 ஆம் தேதி தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

வெப்பநிலை மற்றும் மழைப்பதிவு:

தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருப்பூண்டி, வேதாரண்யம் பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது, நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி உள்ளதால் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • இன்று தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 2 (நாளை) தேர்மேற்கு வங்கக்கடல் பகுதி, இலங்கை கடல் பகுதி, மன்னார் வளைகுடா போன்ற பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70 முதல் 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -