தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

தென்மேற்கு கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தென்தமிழக மாவட்டங்களில் லேசான மழையும், வட தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வறண்ட வானிலை:

தென்மேற்கு வங்ககடலின் தெற்கு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள் மற்றும் இந்திய பெரும்கடலின் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் லேசான மழையும், வட மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் ஏற்பட்டு உள்ள வளிமண்டல சுழற்சி காரணத்தால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 21 (இன்று) தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்??

டிசம்பர் 22 (நாளை) குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here