பாண்டியன் ஸ்டோர்ஸில் முடிவடையும் முல்லை காட்சிகள் – கதறும் ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர், முல்லைக்காக தான் இந்த சீரியலையே பார்த்து வந்தனர். இந்நிலையில் சித்ரா இறந்தது யாருமே எதிர்பார்க்காத விஷயம். அவரின் ரசிகர்கள் பலரும் முல்லை இல்லாத சீரியலை பார்க்க மாட்டேன் என்றும் கூறி வருகின்றனர். மேலும் காவியா முல்லையாக நடிக்க உள்ளார்.

சித்ரா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கூட்டு குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் பலரையும் வெகுவாக கவர்ந்தது. அதிலும் பிடிக்காமல் திருமணம் செய்துக்கொண்ட முல்லை, கதிர் கதாபாத்திரம் தான் இந்த கதைக்கு மேலும் சுவாரசியத்தை சேர்த்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுவும் சித்ராவிற்கு இந்த சீரியல் தான் ஏக வரவேற்பை பெற்று தந்தது. இத்தனை வருட உழைப்பிற்கு சித்ராவிற்கு கிடைத்த பலனே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இப்பொழுது சித்ரா தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பலரையும் அது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தற்கொலைக்கு யார் காரணம் எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பல மர்மங்கள் வெளியானது. ஹேமந்த் மிகவும் மோசமானவன் என்றும் ரக்சனும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் செய்திகள் வெளியாகின. இதனால் பலருக்கும் அதிர்ச்சியே ஏற்பட்டது.

டாப் ஆங்கிளில் கும்முனு போஸ் கொடுத்த சமந்தா!!

இதுநாள் வரை ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு பிறகு யார் நடிக்க போகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் உண்டு. இதில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் அறிவு தான் இதில் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது.

அதையும் தாண்டி சித்ரா நடித்த சீன்களும் முடியவுள்ளது. இன்றைய எபிசோடில் கூட கதிர் முல்லையின் காட்சிகளே அதிகம் காட்டப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 23 உடன் சித்ராவின் காட்சிகள் நிறைவடைகிறது. இதனால் சித்ராவின் ரசிகர்கள் அனைவரும் கதறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here