தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

0
Rain
Rain

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெயிலில் வாட்டி வதங்கி வரும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய தகவல் ஒன்றை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன் படி, அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

டீக்கடைகளை திறந்து கொள்ளலாம் – சென்னையில் தனியார் நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி..!

கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here