அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்பின் நேரடி உதவியாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் வெள்ளை மாளிகை அதிர்ச்சியில் மூழ்கி உள்ளது.
திண்டாடும் அமெரிக்கா:
உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. அங்கு 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். 2017ம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இவருடைய நேரடி உதவியாளருக்கு தான் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2 மாதங்களாக வீட்டில் இருந்து பணியாற்றி வருவதால் இவாங்கா டிரம்ப் அவரை சந்திக்கவில்லை. இருப்பினும் அவருக்கும் கொரோனா சோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தது. வெள்ளை மாளிகையில் கொரோனவால் பாதிக்கப்படும் மூன்றாவது நபர் இவர் ஆவார். இதனைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ளை மாளிகையில் இருப்பவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |