தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6500ஐ தாண்டி உள்ளது. இன்று 4 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா:
- தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 6,535
- இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை – 44 (0.67%)
- அங்கீகரிக்கப்பட்ட கொரோனா ஆய்வகங்களின் எண்ணிக்கை – 53
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 219 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள காரணத்தினால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் 1,824 எண்ணிக்கை ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்தபடியாக விழுப்புரத்தில் 67 பேருக்கும், செங்கல்பட்டில் 40 பேருக்கும், பெரம்பலூரில் 31 பேருக்கும், திருவள்ளூரில் 26 பேருக்கும், திருவண்ணாமலையில் 15 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:
- சென்னை – 3330 பேர்
- கடலூர் – 394 பேர்
- திருவள்ளூர் – 290 பேர்
- அரியலூர் – 271 பேர்
- விழுப்புரம் – 293 பேர்
- செங்கல்பட்டு – 224 பேர்
- கோவை – 146 பேர்
- திருப்பூர் – 114 பேர்
- மதுரை – 113 பேர்
- திண்டுக்கல் – 108 பேர்
- காஞ்சிபுரம் – 114 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |