தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மே 3 முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 11ம் தேதி முதல் டீக்கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது.
தமிழக அரசின் அறிவிப்புகள்:
- தமிழகத்தில் வரும் மே 11ம் தேதி (திங்கள் கிழமை) முதல் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணிமுதல் மாலை 7 மணிவரை டீக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் கடைகளை திறந்து கொள்ளலாம்.
- டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேலும் நின்றோ, அமர்ந்தோ உட்கொள்ள அனுமதி இல்லை. விதிகளை மீறினால் கடைகள் உடனடியாக மூடப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
- சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிற கடைகள் காலை 10.30 மணிமுதல் இரவு 6 மணிவரை திறந்து கொள்ளலாம்.
- சென்னையில் மே 11ம் தேதி முதல் 33% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணிநேரமும் திறக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |