டீக்கடைகளை திறந்து கொள்ளலாம் – சென்னையில் தனியார் நிறுவனங்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி..!

0

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மே 3 முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் 11ம் தேதி முதல் டீக்கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு உள்ளது.

தமிழக அரசின் அறிவிப்புகள்:

  • தமிழகத்தில் வரும் மே 11ம் தேதி (திங்கள் கிழமை) முதல் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணிமுதல் மாலை 7 மணிவரை டீக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. நோய்கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் கடைகளை திறந்து கொள்ளலாம்.
  • டீக்கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். மேலும் நின்றோ, அமர்ந்தோ உட்கொள்ள அனுமதி இல்லை. விதிகளை மீறினால் கடைகள் உடனடியாக மூடப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
  • சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பகுதிகளில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணிமுதல் இரவு 7 மணிவரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பிற கடைகள் காலை 10.30 மணிமுதல் இரவு 6 மணிவரை திறந்து கொள்ளலாம்.
  • சென்னையில் மே 11ம் தேதி முதல் 33% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிமுதல் இரவு 7 மணிவரை இயங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பெட்ரோல் பங்குகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
  • தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் 24 மணிநேரமும் திறக்க அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here