கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தொழில் துறையில் ஏற்பட்டு உள்ள சரிவை சரி செய்ய ஒரு நாளைக்கு 12 மணி நேரமாக தொழிலாளர்கள் வேலை நேரத்தை நீட்டிக்க தொழில் நிறுவன அமைப்புகள் அரசை கோரி உள்ளன.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதனால் டெல்லி, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்கமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் மே 3க்கு பிறகு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. இதனால் பல்வேறு தொழில்துறைகள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளன. ஆனால் 33% சதவீத தொழிலாளர்களுக்கு மட்டுமே அரசு அனுமதி வழங்கி உள்ளது.
வேலை நேரம் நீட்டிப்பு:
12 தொழில்துறை அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் ஊரடங்கு முடிந்து தொழில்களை முழுவதும் இயக்குவது மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்து பேசப்பட்டது. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் துறைகளை மீட்டெடுக்க தொழிலாளர் சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டு வருமாறு கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், இதர நிலுவைத் தொகை மற்றும் போனஸ் போன்றவற்றில் எவ்வித மாற்றங்களும் இருக்காது. ஆனால் ஒரு நாளைக்கு 8 மணிநேரமாக இருக்கும் வேலை நேரத்தை 12 மணிநேரமாக மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு இந்த முறையை பின்பற்ற கோரப்பட்டு உள்ளது. மேலும் 33% ஆக இருக்கும் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களை 50% ஆக மாற்ற தொழில்துறையினர் கோரியுள்ளனர்.
குஜராத், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தொழிலாளர் சட்டத்தில் திருத்தும் கொண்டுவரப் படாமலே வேலை நேரம் 12 மணிநேரமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |