12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கொரோனா – பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..!

0

சீனாவின் ஹவான் நகரில் தொடங்கி தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸினால் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதன் பாதிப்பை கட்டுப்படுத்த மக்களுக்கு பல்வேறு விதத்தில் அரசும் விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் கொரோனா வைரஸ் குறித்த விளக்கங்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாடப்புத்தகத்தில் கொரோனா:

கொரோனா வைரஸிற்கு உரிய தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற நடைமுறைகளை பின்பற்றி தான் ஆக வேண்டும். அதுவரை இயல்பு வாழ்க்கைக்கு மனிதர்கள் திரும்ப சாத்தியமில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இதற்கு மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணமாக உள்ளது.

இந்நிலையில் 12ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நுண் உயிரியல் பாடத்தின் 10 வது அலகில் மருத்துவ வைராலஜி என்ற தலைப்பின் கீழ் கொரோனா வைரஸ் (கோவிட் 19) குறித்த விளக்கம் சேர்க்கப்பட்டு உள்ளது. அது எவ்வாறு பரவுகிறது? அறிகுறிகள் என்னென்ன? உள்ளிட்டவை மிக தெளிவாக விளக்கப்பட்டு உள்ளது. மேலும் 6 முதல் 11ம் வகுப்பு பாடங்களிலும் இதனை சேர்க்க ஆலோசித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here