கோயம்புத்தூரில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான (CAA) போராட்டத்தில் பேசியது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கோவை போலீசார் தேசத்துரோக வழக்கு பதிந்துள்ளனர்.
கடுமையான விமர்சனங்கள்:
குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்த திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், பிப்ரவரி 22ம் தேதி கோவையில் இஸ்லாமிய கூட்டமைப்பு ஒன்று நடத்திய போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். சீமான் பேசும் போது மத்திய அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து இருந்தார்.
இந்த காரணத்தால் கோவை குளியமுத்து போலீசார் பல மாதங்கள் கழித்து சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிந்து உள்ளனர். விரோத உணர்ச்சியை ஏற்ப்படுத்தும் வகையில் பேசுதல், தேசத்துரோகம் ஆகிய பிரிவுகளில் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |