Monday, April 29, 2024

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!!

Must Read

தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள 7 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பரவலாக கனமழை எல்லா மாவட்டங்களிலும் பெய்து வருகிறது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது, அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நீலகிரி, கோவை, மதுரை, தேனி, திண்டுக்கல், சேலம் மற்றும் நாமக்கல் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

விஜயகாந்த் உடல் நலன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் – தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு!!

தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக உள் மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை தமிழகத்தில் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்க கூடும்.

மழைப்பதிவு:

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மதுரையில் உள்ள விமான நிலையம் பகுதியில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது, சங்கராபுரம் பகுதியில் 8 செ.மீ, நெடுங்கல் பகுதியில் 5 செ.மீ, குறைந்தபட்சமாக மதுரையில் உள்ள தல்லாகுளம், திருபுவனம் பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

  • அக்டோபர் 9 ஆம் தேதி அந்தமான் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 9 ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • அக்டோபர் 10 ஆம் தேதி அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு மற்றும் மேற்கு வங்க பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவியின் முக்கிய சீரியலில் இருந்து விலகும் நடிகை.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

மக்கள் மத்தியில் சில காலமாகவே சீரியல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என பல சேனல்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -