தமிழகத்தில் 19 மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

0

தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, மதுரை உட்பட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக வானிலை:

தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தேனி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் விருதுநகர், ராமநாதபுரம் தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மதுரை, திருச்சிராப்பள்ளி, கரூர், ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருத்தணியில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை அனல் காற்றுடன் வெயில் கொளுத்தும் என்பதால் காலை 11.30 மணிமுதல் மதியம் 3.30 வரை வெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here