தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் அதற்கான விடைத்தாள் திருத்தும் பணியும் ஊரடங்கு உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள்:
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 2-ந்தேதி தொடங்கி, 24ம் தேதி நிறைவடைந்தது. அதில் 8.35 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு நடைபெற்ற பொழுதே தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் ஆரம்பித்து விட்டது. இருந்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தேர்வு நடைபெற்று முடிந்தது.
ஏற்கனவே +2 தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மார்ச் 31ம் தேதி நடைபெறுவதாக கூறப்பட்டு பின்பு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கடுத்து ஏப்ரல் 7ம் தேதி நடைபெறுவதாக கூறப்பட்டு ஊரடங்கு உத்தரவால் அதுவும் தள்ளிவைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போது மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ளதால் அதற்க்கு பிறகு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். இதனால் முடிவுகள் வெளியாக மே இறுதி அல்லது ஜூன் மாதம் ஆகும் என கூறப்படுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |