தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக ரூ.2 கோடிக்கு மேல் அபராதம் வசூல் – 2.8 லட்சம் பேர் கைது..!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 1600ஐ கடந்து விட்டது. இதனால் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

காவல்துறை அதிரடி:

தமிழகத்தில் ஊரடங்கில் எந்தவித தளர்வுகளும் மே 3 வரை கிடையாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதையும் மீறி பலர் தேவையற்ற காரணங்களுக்காக வெளியில் சுற்றுகின்றனர். அவர்களை கைது செய்யும் தமிழக போலீசார் அபராதமும் வசூலித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 1600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 27 பேர் டிஸ்சார்ஜ்..!

தமிழக காவல்துறை வெளியிட்ட அறிவிப்பின் படி 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2,85,150 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தடை உத்தரவை மீறியதாக 2,68,537 வழக்குகள் பதியப்பட்டு 2,39,770 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுவரை 2 கோடியே 68 லட்சம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here