தமிழ்நாட்டில் 1600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 27 பேர் டிஸ்சார்ஜ்..!

0
Corona Treatment
Corona Treatment

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இன்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 1600ஐ தாண்டி உள்ளது.

தமிழ்நாடு கொரோனா:

தமிழகத்தில் இதுவரை 1629 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்று ஒரே நாளில் 27 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்து உள்ளது. புதிதாக ஏதும் உயிரிழப்புகள் ஏற்படாததால் உயிரிழப்புகள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது.

இன்று குணமடைந்து வீடு திரும்பியவர்களில் அதிகபட்சமாக கடலூரில் 9, கரூரில் 5 மற்றும் நெல்லையில் 4 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 23,760 பேரும், அரசு கண்காணிப்பில் 155 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 23 பேர் ஆண்கள் எனவும், 10 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விபரம்:

  • சென்னை – 373 பேர்
  • திருப்பூர் – 109 பேர்
  • மதுரை – 50 பேர்
  • கோவை – 134 பேர்
  • திண்டுக்கல் – 77 பேர்
  • ஈரோடு – 70 பேர்
  • நெல்லை – 62 பேர்
  • செங்கல்பட்டு – 56 பேர்
  • தஞ்சை – 54 பேர்
  • திருச்சி & நாமக்கல் – 51 பேர்
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here