நம் கண்கள் தான் நம் முகத்திற்கு அழகு சேர்க்க கூடிய ஒன்றாகும். கண்களுக்கு கீழ் உள்ள சருமம் மிகவும் சென்சிடிவ்வான பகுதியாக இருப்பதினால் இதற்கு அதிக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். கண் சுருக்கங்கள் நீங்க ஆரஞ்சு பழத்தோல் மற்றும் வேப்ப எண்ணெய் இரண்டும் பயன்படுகிறது. இதை வைத்து எப்படி கண் சுருக்கத்தை நீக்கலாம் என்று பார்ப்போம்
கண் சுருக்கம் நீங்க
ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் 1 தேக்கரண்டியளவு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரைத்த ஆரஞ்சு தோல் பவுடர் 1 தேக்கரண்டி எடுத்து கொள்ளவும் அதன்பின் வேப்ப எண்ணெயை 3 முதல் 4 துளி வரை கலந்து கொள்ளவும் கண்களை சுற்றி மெதுவாக மசாஜ் செய்யுங்கள். பின் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்துக் கழுவுங்கள். இவ்வாறு செய்வதினால் கண் சுருக்கம் நீங்க ஆரமிக்கும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டும்.
மற்றொரு முறைப்படி ஒரு கிண்ணத்தில் ஜோஜோபா எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு, தேங்காய் எண்ணெய் -1 தேக்கரண்டியளவு, அப்ரிகாட் கர்னல் எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு ,அவோகேடா எண்ணெய் – 2 தேக்கரண்டியளவு எடுத்து கொண்டு நன்றாக கலந்து படுக்கைக்கு செல்லும்போது இதனை நன்றாக தடவி விட்டு படுக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அதனை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் கண் சுருக்கம், கண் சோர்வு ஆகியவை நீங்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |