தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் இன்று திருச்சி சென்றிருந்த முதல்வர் தனது உரையில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளது. ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவக்குழுவுடன் நடைபெற உள்ள ஆலோசனைக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என கூறியுள்ளார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Conference
Conference

ஒசாமா பின்லேடன் தியாகி – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்..!

தமிழகத்தில் அரசின் முயற்சியால் கொரோனா பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளதாக கூறிய முதல்வர், திங்கட்கிழமை (ஜூன் 29) மருத்துவக்குழுவுடன் ஆலோசிக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை தமிழகம் பின்பற்றும் என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here