சொந்த மாவட்டத்தில் ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது – தேர்வில் முறைகேட்டை களைய புதிய நடவடிக்கைகள்..!

0
Exam

தமிழகத்தில் நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முறைகேடுகளுக்கு உதவும் வகையில் ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது என கல்வி உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தனியார் பள்ளிகளின் 100% தேர்ச்சிக்காக..!

சில தனியார் பள்ளிகள் 100% தேர்ச்சியை காண்பிப்பதற்காக தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை தேர்வுப் பணியில் ஈடுபடுத்துகின்றன. இது போன்ற செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் வரும் மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிய கட்டுப்பாடுகள்..!

பொதுத்தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெறாத வண்ணம் தடுக்க இந்த புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

  • ஆசிரியர்கள், அவரவர் சொந்த பள்ளிகள் மற்றும் சொந்த கல்வி மாவட்டங்களில், பணி அமர்த்தக் கூடாது.
  • தேர்வு கண்காணிப்பாளர், தேர்வு மைய தலைமை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளில், ஆசிரியர்களுக்கு ஏற்கனவே பணி ஒதுக்கப்பட்ட பின், அந்த இடத்தை திடீரென மாற்றக் கூடாது.
  • குலுக்கல் முறையிலும், ‘ரேண்டம்’ என்ற தோராய அடிப்படையிலும், ஆசிரியர்களுக்கான தேர்வு பணிகள் ஒதுக்கப்படும். வேறு முறையில் தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை பணியமர்த்திக் கொள்ள முடியாது.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here